Skip to main content

Posts

Showing posts from May, 2017

உடலை வலிமையாக்கப் புரத பவுடர் உதவுமா?

ஓவியம்: வெங்கி ஜிம்முக்குப் போகிறவர்கள், உடலை வலுப்படுத்த நினைப்பவர்கள் உடல் வலிமைக்குத் தினமும் புரோட்டீன் (புரதம்) பவுடர் உட்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். இது சரியா? இன்றைய நாகரிகச் சூழலில் இயற்கை உணவில் கிடைக்கும் புரதத்தை நம்புவதைவிட புரோட்டீன் பவுடர், புரோட்டீன் ஷேக் போன்ற செயற்கை ஊட்டச்சத்து பானங்களைப் பயன்படுத்துவது நல்லது எனும் நம்பிக்கை பலரிடம் உள்ளது. இது தவறு. புரதச் சத்து என்பது 20-க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்களின் கூட்டுச் சேர்க்கை. இது உடல் தசைகளுக்கு வலு சேர்க்கிறது; செல்களின் தேய்மானத்தைக் குறைத்துப் புதுப்பிக்கவும், காயம், புண் போன்றவை ஆறுவதற்கும் உதவுகிறது. என்சைம், ஹார்மோன் (இயக்குநீர்), வைட்டமின், பித்தநீர், ஹீமோகுளோபின் போன்றவை உற்பத்தியாகப் புரதம் அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிற இமுனோ குளோபுலின்களைத் தயாரிக்கவும் இது தேவை. நமக்குத் தினமும் சராசரியாக 50 கிராம் புரதம் அவசியம். இதை நாம் சாப்பிடும் உணவிலிருந்தே பெறலாம். சைவம் சாப்பிடு பவர்கள் பால், தயிர், பருப்பு, பயறு, காளான், எண்ணெய் வித்துகள், கொட்டைகள் வழியாகவும், அசைவம் சாப்பிடுபவர...

பழங்களைத் தோலோடு சாப்பிடுவது நல்லதா?

ஓவியம்: வெங்கி பழங்களைத் தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது என்கிறார்கள். ஆனால், பழங்களை வாங்கியதும் நாம் செய்யும் முதல் வேலை தோலை நீக்குவதுதான். இது சரியா? தோல்கள் என்றாலே அவை தேவையற்றவை என்று நாம் மனதில் பதிந்து போனதன் விளைவு இது. பல பழங்களில் அவற்றின் உட்பகுதியைவிட தோலில்தான் அதிக சத்துக்கள் இருக்கும். குறிப்பாக சப்போட்டா, மாம்பழம், திராட்சை, கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி போன்ற பழங்களின் தோலில் அதிக நார்ச்சத்து இருக்கிறது. இவற்றைத் தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது. பழங்களைப் பிழிந்து, வடிகட்டி, சாற்றை மட்டும் குடிக்கும்போது நார்ச்சத்து இழக்கப்படும். ஆப்பிள் தோலில் கால்சியம், பொட்டாசியம் தாதுக்களும் வைட்டமின் ஏ, சி சத்துக்களும் நார்ச்சத்தும் அதிகம். இந்தச் சத்துக்கள் இதய நோயாளிகளுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் தேவைப்படுகின்றன. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்தும் நம் தேவைக்கு உள்ளது. இது புற்றுநோயைத் தடுக்கும் குணம்கொண்டது. ஆகவே, ஆப்பிள் பழத்தைத் தோலோடு சாப்பிட்டால்தான் இந்த சத்துக்கள் கிடைக்கும். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவும் உடனே அதிகரித்துவிடாது. ஆப்பிளைச் சாறு பிழிந...

முட்டையைப் பச்சையாகக் குடிக்கலாமா?

வளரும் குழந்தைகளுக்கு முட்டையைப் பச்சையாகக் கொடுத்தால் உடல் வலுப்பெறும் என்றும், பூப்படைந்த பெண்களுக்கு ‘பச்சை முட்டை’ தருவது நல்லது என்றும் கூறுவது எந்த அளவுக்கு உண்மை? குழந்தை முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் முட்டை ஒரு சிறந்த உணவு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஒரு முட்டையின் எடையில் சுமார் 60 சதவீதம் வெள்ளை கருவும் 30 சதவீதம் மஞ்சள் கருவும் உள்ளன. வெள்ளைக் கருவில் 90 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது. 10 சதவீதம் புரதம் உள்ளது. இதில் கொழுப்பு சுத்தமாக இல்லை. கார்போஹைட்ரேட் சத்தும் குறைவு. மஞ்சள் கருவில் 100 சதவீதம் கொழுப்பு உள்ளது. இதன் மஞ்சள் நிறம் குறிப்பிட்ட பறவை இனம் சாப்பிட்ட உணவில் உள்ள ‘கரோட்டினாய்டு’ (Carotenoid), ‘ஸாந்தோபில்’ (Xanthophyil) எனும் மஞ்சள் நிறமிகளின் அளவை பொறுத்து உருவாகிறது. உதாரணமாக மஞ்சள் நிற மக்காச்சோளத்தைத் தின்று வளரும் பறவையின் முட்டை, அதிக அடர்த்தியுடன் கூடிய மஞ்சள் கருவைப் பெற்றிருக்கும். மஞ்சள் கருவில் உள்ள நிறமிகளில் ‘லூட்டின்’ எனும் நிறமிதான் அதிகம். மற்றச் சத்துகள் என்ன? 100 கிராம் கோழி முட்டையில் தண்ணீர் 75 கிராம், கார்போஹைட்ரேட் 1....

இஸ்லாம் வாழ்வியல்: படைப்புகளைப் பழிக்காதீர்கள்!

உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற வித்தியாசமும் வேறுபாடுகளும் மனிதர்களிடையே இருக்கக் கூடாது என்பது நபிகள் நாயகத்தின் போதனை. அல்லாஹ்வின் படைப்புகளில் எதையும் பழிக்காதீர்கள்! மானிடரில் எவரையும் பரிகசிக்காதீர்கள்! குட்டையானவர்களைக் கண்டு குறைகூறும் நோக்கத்தில் ஏளனம் புரியாதீர்கள்! பெண்கள் மீது களங்கம் கற்பிக்கும் பொருட்டு அவதுாறு சொல்லாதீர்கள்! அண்ணல் நபியின் அறக்கட்டளைகள் இவை. அவதுாறு, ஏளனம், பரிகாசம், எள்ளல், இகழ்ச்சியுரை ஆகியவற்றை இறை விசுவாசிகள் தவிர்க்க வேண்டும். அனைத்துப் படைப்புகளையும் அழகாகவே படைத்திருப்பதாகச் சொல்கிறான் இறைவன். ஆகவே, ஒருவர் மற்றவரைப் பழிப்பதும், அவதுாறாகப் பேசுவதும் ஆண்டவன் வெறுக்கும் செயல். அவன் தேவையின்றி வீணுக்காக யாரையும், எதையும் சிருஷ்டிக்கவில்லை என்று குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன. எனவே, படைப்புகளில் எதையும் பரிகசிக்கும் உரிமை மனிதர்களுக்குக் கிடையாது. உருவத்தைப் பார்த்து எள்ளி நகையாடுவது பாவச் செயல். உருவத்தைவிட உள்ளம் உயர்ந்தது. தோற்றத்தைக் காட்டிலும் துாய எண்ணமும் உணர்வும் மேலானவை. அவ்வாறே, பெண்கள் மீது அவதுாறு சொல்வதும் பெர...

ஒரு நிமிடக் கதை: பயணம்

“கோகுலுக்கும் ஹரிணிக்கும் போரடிக்குது. நாளைக்கு மகா பலிபுரம் போயிட்டு வரலாம்பா. போக வர மூணு மணி நேரம்தான். நம்ம கார்லயே போயிட்டு வந்துடலாம். நீங்களும் வாங்க!” - அப்பா ராகவனிடம் சொன்னான் பிரபாகர். “போகலாம். ஆனா பஸ்ல போனா நானும் வர்றேன். கார்ல போறதா இருந்தா நான் வரலைப்பா” - அப்பா சொன்னதைக் கேட்டு வியப்பாக இருந்தது பிரபாகருக்கு. “பஸ்லயா? இங்கேயிருந்து பஸ் ஸ்டாண்டுக்குப் போயி, அங்கேயிருந்து மகாபலிபுரம் பஸ் பிடிக்கணும். அங்கேயும் ஒவ்வொரு இடத்தையும் பார்க்க ஆட்டோவோ டாக்ஸியோ பிடிக்கணும். கார்ல ஈஸியா போயிட்டு வர்றதை விட்டுட்டு என்னப்பா சொல்றீங்க?” “காருக்கு பெட்ரோல் போடுற செலவு இருக்குல்ல. அதை அங்கே ஆட்டோவுக்குக் குடுக்கலாம்!” “அதுக்கு இல்லப்பா. உங்களுக்கும் சிரமம். பசங்களுக்கும் சிரமம். கார் இருக்குறப்ப எதுக்காக இவ்வளவு சிரமப்படணும்னுதான் கேட்கிறேன்.” “கொஞ்சம் சிரமம்தான். ஆனா பஸ்ல போறதுலேயும் எவ்வளவோ நல்லதுஇருக்கத்தான் செய்யுது.” “என்ன நல்லது? இந்த வேகாத வெயில்ல, கூட்டத்துல சிரமத்தோட போயிட்டு வரணுமா?” ஆச்சரியமாக கேட்டான் பிரபாகர். “வெயில் எல்லாருக்கும்தான் இருக்குது...

ஹாலிவுட்டை வீழ்த்தி விடுவோம் என்று கூறுவதற்கு முன்பு சற்றுப் பொறுங்கள்: பாகுபலி குறித்து கமல்ஹாசன்

கமல் | கோப்பு படம் பொருளாதார ரீதியில் 'பாகுபலி' ஒரு சிறந்த படம்; ஆனால் அவைகளின் பிரம்மாண்டம் சிஜி வேலைகளால்தான் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள 'பிக் பாஸ்' தமிழ் வடிவ நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்கு இடையில் பேசிய கமல்ஹாசன், பொருளாதார ரீதியாகப் பேச வேண்டுமெனில் திரை உலகத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய விஷயம் 'பாகுபலி'. அதற்காக அவர்கள் கடினமாக உழைத்திருக்கின்றனர். படத்தின் பிரம்மாண்ட சிஜி வேலைகள், ரசிகர்களின் கற்பனைக்கு அதிகம் உதவியிருக்கின்றன. ஆனால் எங்களால் ஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்று அவர்கள் கூறும்போது, சிறந்த படம் என்ற உங்களின் தீர்மானத்தைக் கொஞ்சம் நிறுத்தி வையுங்கள். நாம் போக வேண்டிய தூரம் இன்னும் உள்ளது. 'பாகுபலி' படம், நாம் மிகச் சிறந்த கலாச்சாரத்தையும், தலைசிறந்த கதைகளையும் இங்கேயே கொண்டிருக்கிறோம் என்பதை நிரூபித்துள்ளது. ஆனால் அவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன். நம்முடையது 70 வருட கலாச்சாரம். இன்னும் சந்திரகுப்த மெளரியர், அசோகர் காலத...

மெகா ஆட்குறைப்பு நடவடிக்கை! அதிரவைக்கப்போகும் ஏழு முன்னணி ஐ.டி நிறுவனங்கள் இவைதாம்!

இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்கள், முன் எப்போதுமில்லாத அளவில் ஆட்குறைப்பில் இறங்கியுள்ளன. ட்ரம்ப்பின் விசா கட்டுப்பாடு, ஐ.டி துறை வீழ்ச்சி ஆகியவை ஐ.டி ஊழியர்களுக்கு இந்த ஆண்டு பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காக்னிஸன்ட், விப்ரோ, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், பல ஆயிரம் ஐ.டி ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளன. அதேபோல டெக் மஹிந்திரா நிறுவனம் 1,500 ஊழியர்களை நீக்கி, ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கையால், புதிதாக பணிக்குச் சேர்ந்தோர் மட்டுமல்லாமல், 10 முதல் 15 ஆண்டு கால அனுபவம் உள்ளவர்களைக்கூட ஐ.டி நிறுவனங்கள் நீக்குவதற்குத் தயாராக உள்ளன.  ஐ.டி நிறுவனங்களின் கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிராக, சில பணியாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில், 7 முன்னணி நிறுவனங்கள் இந்த ஆண்டுக்குள் 56,000 ஊழியர்களை நீக்கி, ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் (HCL), அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட காக்னிஸன்ட், DXC டெக்னாலஜி, ஃப்ரான்ஸின் Cap Gemini SA நிறுவனம்...

ஒற்றைத்தலைவலியைப் போக்க உதவும் 10 இயற்கை வழிமுறைகள்!

தலைவலியும் வயிற்றுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்' என்பார்கள். இந்த வாசகத்தில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பது அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். ஒற்றைத்தலைவலி... மகா வேதனை! அந்த வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மரபியல் காரணங்கள், பருவநிலை மாற்றம், அதிக நெடியுள்ள வாசனை, மனஅழுத்தம், தூக்கமின்மை, பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்புக் குறைவது... என ஒற்றைத்தலைவலிக்கான பட்டியலில் காரணங்களும் அதிகம். எனவே, ஒற்றைத்தலைவலிக்கு இதுதான் காரணம் எனக் குறிப்பிட்டும் சொல்ல முடியாது. `இதைக் குறைக்க மாத்திரை, மருந்துகள் இருந்தாலும், சில உணவு முறைகளையும் வழிமுறைகளையும் பின்பற்றினால் சரிசெய்ய முடியும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். அந்த இயற்கை வழிமுறைகளைப் பற்றி விவரிக்கிறார் சித்த மருத்துவர் ரமேஷ்...   ஆளி விதை உடலில் தொற்றுநோய் அல்லது காயங்களால் ஏற்படும் கட்டிகள், வீக்கம் போன்றவையும் ஒற்றைத்தலைவலி ஏற்பட காரணமாக உள்ளன. இது போன்ற பிரச்னைகளால் ஏற்படும் ஒற்றைத்தலைவலிக்கு ஆளி விதை மிகச் சிறந்த நிவாரணம் தரும். இதில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி அமிலங்கள் (Omega-3 fatty acid) இதற்கு துணைபுரிக...

"என்னை இம்ப்ரஸ் பண்ண நானே டிப்ஸ் தர்றேன்” - வி.ஜே மணிமேகலை கலகல

நேயர்களின் கலாய்களுக்கு அசால்ட்டாகக் கவுன்டர்களை விளாசும் செம க்யூட் விஜே மணிமேகலை. சன் மியூசிக்கில் இவரின் ஷோவிற்கு அத்தனை க்ரேஸ். ஜாலிப் பேச்சும், அரட்டையுமாக நிகழ்ச்சியில் பார்ப்பது போலவே, அதே எனர்ஜியோடுதான் வீட்டிலும் இருக்கிறார். அவரின் வீட்டிற்குள் நுழைந்ததும் முதலில் என்னை வரவேற்றது பப்பு. மணிமேகலை வளர்க்கும் பச்சைக்கிளி அது. கீச்சிடும் குரலில் நம்மை வசீகரிக்கிறது அந்தக் கிளி. மணிமேகலையிடம் எந்தக் கேள்விக் கேட்டாலும் முதல் பதில் பப்புவிடமிருந்து தான் வருகிறது. மணிமேகலையுடனும் பப்புவுடனும் ஒரு ஜாலி சேட்.  மீடியா என்ட்ரி?  நேட்டிவ் கோயம்புத்தூர். சின்ன வயசுலயே சென்னையில செட்டிலாகிட்டோம்.  மீனாட்சி காலேஜ்ல படிச்சிட்டு இருக்கும் போது, தோழிகளோட சேர்ந்து சும்மாக்காச்சி விஜே வேலைக்கு விண்ணப்பிச்சேன்.  ஆனா நான் மட்டும் தான் செலக்ட்டானேன். கெத்து மொமன்டோட படிக்கும் போதே விஜே-வானதுனால காலேஜ்ல செம ஃபேமஸாகிட்டேன்.  வீட்டுல என்ன சொன்னாங்க?  விஜே-வாக போறேன்னு வீட்டுல சொன்னபோது, முதல்ல எதிர்ப்புதான். படிப்பு ஒழுங்கா வரமாட்டேங்குது. இதுல விஜே-வாகிட்...

சமூக ஊடகங்களுக்கு வெளியே மகிழ்ச்சி இருக்கிறதா?

சமூக ஊடகங்களில் அன்றாட நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ளும் தம்பதிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டேயிருக்கிறது. வெளி உலகம் தங்களை மகிழ்ச்சியான தம்பதிகளாக அடையாளம்காண வேண்டும் என்று பெரும்பாலான தம்பதிகள் விரும்புவதே அதற்குக் காரணம். அதனால்தான், பேஸ்புக் மாதிரியான ஊடகங்களில் தங்களுடைய காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கைத் தருணங்களைப் பல தம்பதிகள் பகிர்ந்துகொள்கிறார்கள். அத்துடன், தங்களுடைய பரஸ்பர அன்பையும் ஒளிப்படங்கள், நிலைத்தகவல்கள் போன்றவை மூலம் பலவிதங்களில் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், சமூக ஊடகங்களில் இப்படி மகிழ்ச்சியாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் தம்பதிகள் நிஜவாழ்க்கையில் மகிழ்ச்சியானவர்களாக இருப்பதில்லை என்கின்றன சில ஆய்வுகள். ஏனென்றால், உண்மையிலேயே மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் தம்பதிகள் தங்களுடைய உறவை வெளி உலகம் அங்கீகரிக்கவோ புகழவோ வேண்டுமென்று எதிர்பார்ப்பதில்லை என்கின்றன அவை. இன்னும் சொல்லப்போனால், அவர்கள் தங்களுடைய உறவைப் பற்றிச் சமூக ஊடகங்களில் பேசுவதேயில்லை. மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் தம்பதி...

வேலையற்றவனின் டைரி - நலம்...நலமறிய ஆவல்

ஓவியம்: வெங்கி நான் ஒன்பதாவது படிக்கும்போது, என்னை அன்னமங்கலம், சிறுமலர் மேல்நிலைப் பள்ளி ஹாஸ்டலில் சேர்த்துவிட்டார்கள். ஹாஸ்டலில் என்னை விடுவதற்காக வந்த என் தந்தை, ஒரு கத்தை 15 பைசா போஸ்ட் கார்டுகளை வாங்கிக் கொடுத்தார். நான் என்னவோ இங்கிலாந்து, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துவிட்டதுபோல், நான் ஹாஸ்டலில் சேர்ந்த விவரத்தைத் தெரிவித்து, உறவினர்களுக்குக் கடிதம் எழுதச் சொன்னார். ஹாஸ்டலிலிருந்து என் முதல் கடிதத்தை, என் தந்தைக்குத்தான் எழுதினேன். உடனே என் தந்தையிடமிருந்து மின்னல் வேகத்தில் வந்த கடிதத்தில், “சிரஞ்சீவி சுரேந்திரனுக்கு, நீல்லாம் என்னத்த படிச்சு, எப்படி உருப்படப்போகிறாய் என்று தெரியவில்லை. ஒருவருக்குக் கடிதம் எழுதும்போது, முகவரியில் அவருடைய பெயருக்கு முன்னால் ‘திரு’என்று போட்டு எழுதும் பழக்கத்தை முதலில் கற்றுக்கொள்” என்று, அவர் பெயருக்கு முன்னால் ‘திரு’போடாததற்காகக் கோபப்பட்டு எழுதியிருந்தார். அடுத்து, உறவினர்களுக்குக் கடிதம் எழுதத் தொடங்கினேன். அவை நீங்கள் நினைப்பது போல் சாதாரண, “நலம். நலமறிய ஆவல்” கடிதங்கள் அல்ல. அப்போது நான் தீவிரமாகப் புத்தகங்கள் படிக்க...

ஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதை: ஏமாற்றாதே! ஏமாற்றாதே!

நீண்ட காலத்துக்கு முன்னர், அனான்சி என்ற சிலந்தி வாழ்ந்துவந்தது. அது மிகவும் பேராசை பிடித்ததாக இருந்தது. அதனால், அது தன்னுடைய பொருட்கள் எதையும் மற்றவர்களுடன் எப்போதுமே பகிர்ந்துகொள்ளாது. ‘பகிர்ந்துண்டு வாழ்வாரே வாழ்வர்’ என்பதை அது புரிந்துகொள்ளவில்லை. ஒரு நாள், அது தன்னுடைய தோட்டத்தில் விளைந்த சுவையான சேனைக் கிழங்குகளைச் சமைத்துக்கொண்டிருந்தது. சேனைக்கிழங்கின் வாசனை அதன் மூக்கைத் துளைத்து மேலும் பசியை உண்டு பண்ணியது. ஆனால், எப்படியோ மதிய உணவுவேளை வரும்வரை பொறுமையுடன் காத்திருந்தது. அது தன்னுடைய சுவையான சேனைக் கிழங்குகளைச் சாப்பிடத் தயாராக இருக்கும்போது, யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. அனான்சிக்கு ஒரே கோபமாக வந்தது. அதே கோபத்துடன் வேகமாக வந்து கதவைத் திறந்தது. பார்த்தால், கோசோ என்ற ஆமை அங்கே நின்றுகொண்டிருந்தது. அது நீண்ட தூரம் பயணித்து வந்த களைப்பிலும் பசியிலும் இருந்தது. “வணக்கம் அனான்சி, நீ என்ன சமைத்துக்கொண்டிருக்கிறாய்? ஏதோ நல்ல சுவையாக சமைத்துவைத்திருக்கும் வாசனை வருகிறது” என்றது கோசோ. “ஓ, ஆமாம், இன்று மதிய உணவுக்காக சேனைக்கிழங்குகள் சமைத்திருக்கிறேன்” என்று தய...

தாகம் தணிக்கக் குளிர்பானம் குடிக்கலாமா?

குளிர்பானங்களைக் குடிப்பது ஆரோக்கியத்துக்குக் கெடுதல் என்று பொதுவாகச் சொல்கிறார்கள். ஆனால், கோடையில் தாகம் தணிக்க அவற்றைக் குடிப்பதில் தவறில்லை என ஒரு விளம்பரத்தில் படித்தேன். இது சரியா? இது சரியில்லை. குளிர்பானம் என்பது அதிக அளவில் 'ஃபிரக்டோஸ்' எனும் சர்க்கரையும் கார்பன்-டை-ஆக்சைடும் கலக்கப்பட்ட ஒரு பானம். இதில் எவ்வித ஊட்டச்சத்தும் இல்லை. இவற்றைக் குடிப்பதால் ஆற்றலும் கிடைப்பதில்லை; முக்கியமாகத் தாகம் தணிவதும் இல்லை. குளிர்பானங்களின் சுவையை மேம்படுத்துவதற்காக, காஃபீன் சேர்க்கிறார்கள்; இனிப்பை நிலைப்படுத்துவதற்காகச் சிட்ரிக் அமிலம், பாஸ்பாரிக் அமிலம் போன்றவற்றைக் கலக்கிறார்கள்; வண்ணமூட்டுவதற்காக கேராமல், பீட்டா கரோட்டினைப் பயன்படுத்துகிறார்கள். இவை தவிர அஸ்பர்டேம் போன்ற செயற்கைச் சுவையூட்டிகள், செயற்கை நிறமூட்டிகள், பதப்படுத்தும் வேதிப்பொருட்கள் ஆகியவை அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நம் உடல் உறுப்புகளுக்கு ஆபத்தைத் தரக்கூடியவை. தாகம் தணிக்குமா? குளிர்பானங்களைப் பெரும்பாலும் அதிகக் குளிர்ச்சியான நிலையில்தான் குடிக்கிறோம். ...

சூரியகாந்தி எண்ணெய் சமையலுக்கு நல்லதா?

சமையலுக்கு ஆரோக்கிய மான எண்ணெயை நான் பயன்படுத்த நினைக்கிறேன். ஆனால், எண்ணெயைத் தேர்ந்தெடுப் பதில் குழம்பிப் போகிறேன். சிலர் சூரியகாந்தி எண்ணெய் நல்லது என்கிறார்கள். வேறு சிலர் ஆலிவ் எண்ணெய் நல்லது என்கின்றனர். `கடலை எண்ணெய் இல்லாமல் சமையலா?’ என்றும் சிலர் கேட்கின்றனர். இவர்கள் சொல்வதில் எது சரி? சமையலுக்கு எந்த எண்ணெய் நல்லது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், எண்ணெய் குறித்த சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்வது நல்லது. எண்ணெய் என்றாலே அது கொழுப்பு என்பது எல்லோருக்கும் தெரியும். எண்ணெயில் உள்ள கொழுப்பு, அமிலத்தன்மை கொண்டது. அதனால் அதைக் கொழுப்பு அமிலம் (Fatty Acid) என்று அழைக்கிறோம். கொழுப்பு அமிலங்கள் கொழுப்பு அமிலங்கள் முக்கிய மாக இரண்டு வகை. செறிவுற்ற கொழுப்பு அமிலம் (Saturated Fatty Acids சுருக்கமாக SFA), செறிவுறா கொழுப்பு அமிலம் (Unsaturated Fatty Acids). இவற்றில் செறிவுற்ற கொழுப்பு அமிலம் ரத்தக் கொலஸ்ட்ரால் அளவை நேரடியாகவே அதிகரிக்கும். ரத்தத்தில் எல்.டி.எல். கொழுப்பையும் அதிகரிக்கும். இதனால் மாரடைப்பு ஏற்படுவதற்குச் சாத்தியம் அதிகம். இந்தக் கொழுப்பு அமில...

ஒரு நிமிடக் கதை: புதிய தலைமுறை

ஊரே அந்த வீட்டின் முன் கூடி யிருந்தது. பூங்கோதைக் கும்கூட அவள் கணவன் மேல் சந்தேகம் இருக்கவே செய்தது. கோபமாய் அமர்ந்திருந்த சின்னராசுவை நெருங்கிய அவள், “இப்போ ஊரே கூடிவந்து நிக்குது. இவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போற?” என்றாள். அதற்கு சின்னராசு, “இங்க பாரு…. நான் முன்ன மாதிரி எல்லாம் இல்ல. திருடிப் பொழைக்கிறதை விட்டுட்டேன். கட்டுன பொண்டாட்டி, நீயே என்னை நம்பலை... அவங்களால என்ன பண்ணமுடியுமோ அதை பண்ணிக்கச் சொல்லு” என்றான் முடிவாக. அவன் பேசியதைக் கேட்ட ஊராரும் போலீஸில் புகார் கொடுப்பதாய் சொன்னார்கள். அடுத்த இரண்டு மணி நேரத்தில் காவல்துறை ஜீப் புழுதியைக் கிளப்பிவிட்டு சின்னராசுவின் வீட்டின் முன் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்ட ரும் கான்ஸ்டபிள்களும் சின்னராசுவின் சட்டையைப் பிடித்து இழுத்து வந்தனர். சின்னராசுவின் கால்களை அவனது 6 வயது மகனும், 4 வயது மகளும் பிடித்துக்கொண்டு, “அப்பா போவா தப்பா...” என்று கதறினர். அவர்களைப் பிடித்து இழுத்த பூங்கோதையின் கண் களிலும் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. ஆறுமாத தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டான் சின்னராசு. ஒரு மாதம்...